×

போலி பில் தயாரித்து ரூ.24 லட்சம் மோசடி: மேலாளர் மீது வழக்கு

 

விருதுநகர், ஜூன் 14:விருதுநகர் பேராலி ரோட்டில் உள்ள தனியார் பாலிபேக் நிறுவனத்தில் எல்பிஎஸ் நகரை சேர்ந்த ஞானசேகரன் கடந்த 2016 முதல் மேலாளராக பணியாற்றி வந்தார். கம்பெனிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கும் பொறுப்பை பார்த்து வந்தார். இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள நிறுவனத்திடமிருந்து மோசடியாக பில்களை தயார் செய்து தனது மகன் கவுதமன் நடத்திவரும் நிறுவனத்திற்கு பொருட்கள் வாங்கும் வகையில் ரூ.24 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த நிறுவனத்தின் கணக்காளர் செல்வராஜன் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஞானசேகரன், அவரின் மகன் கவுதமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலி பில் தயாரித்து ரூ.24 லட்சம் மோசடி: மேலாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Gnanasekaran ,LPS Nagar ,Barali Road ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...